இந்த குறிப்பிட்ட தரிசனக் காலம் முழுவதும், எல்லாம் வல்ல இறைவனை நோக்கிய வேண்டுதல்கள் நிறைந்த பக்தர்களின் எதிரொலி நிரம்பியிருக்கிறது. அனைத்து பாதைகளும் ஸ்வாமியின் உறைவிடத்தையே அடைகிறது. ஸ்வாமியை தரிசிக்கும் மன உறுதி...
சபரிமலைப் பயணத்தின்போது, பக்தர்கள் தரிசிக்க வேண்டிய முக்கிய தலங்கள் பின்வருமாறு: எருமேலி சபரிமலைக்குச் செல்லும் அனைத்து பக்தர்களும் எருமேலிக்குச் செல்வர். மஹிஷி வதம் செய்யப்பட்ட தலமும், மத நல்லிணக்கத்துக்கான இடமும் ஆகும். இங்கு வந்த பிறகுதான் ஐயப்பனால் மஹிஷி வதம் செய்யப்பட்டார் என்று நம்பப்படுகிறது.
41 நாள் விரதம் அனுசரித்து, தூய்மையானவர்களாக சபரிமலையை நோக்கி பயணிக்கிறார்கள் பக்தர்கள். மாலையைக் கழுத்தில் அணிந்ததும், பக்தன் இறைவனுடன் ஒன்றுகிறார். ஆகவே விரதத்தின் தூய்மை மிகவும் இன்றியமையாததாகும். சூரியக் கடவுள் முக்தியை நோக்கி நகரத் துவங்கும் மலையாள மாதம் வ்ரிஸ்சிகத்தின் முதல் நாளன்று விரதம் துவங்கப்படவேண்டும். முன்னதாக யாத்திரை செல்ல நினைப்பவர்கள் அதற்கேற்ப நாட்களைத் திட்டமிட வேண்டும்.
தர்ம சாஸ்தா சபரிமலையின் தெய்வமாவார். ஐய்யப்ப ஸ்வாமி, தர்ம சாஸ்தாவாக விளங்குவதாக ஐதீகம். ஸ்வாமி ஐயப்பன், துன்பங்களை அழிக்கும் தெய்வமாக தனது பக்தர்களால் வழிபடப்படுகிறார். 41 நாட்கள் விரதத்திற்கு பிறகு மட்டுமே சபரிமலை யாத்திரையை மேற்கொள்ளவேண்டும்...